மாறிய தலைகள் – நவீன் சங்கு

கொரானா கால சந்திப்புகள் – 4

இந்த கதையை வாசிக்க தொடங்கும் போது, Quarantine ஆல் பாதிக்கப்பட்ட வெளி மாநில வேலை ஆட்கள் இந்திய நெடுஞ்சாலை எங்கும் எந்த வித எதிர்ப்பு உணர்வும் இல்லாமல் நடந்தே சென்றதை காண நேர்ந்தது. அதில் ஒரு நிகழ்வு, சாலையில் அடிபட்டு செத்து கிடக்கும் நாயை ஒரு மனிதன் தின்கிறான். இன்னொரு நிகழ்வு, நடந்த அயர்ச்சி யில் இரயில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 10-15 பேர் மேல் இரயில் நசுக்கி சென்றது.

“Migrant woes are ‘Greatest ManMade Tragedy’ in India since Partition: Ramchandra Guha”

எல்லா சமூக சீரழிவுகளிலும் தனது நிலைப்பாட்டை சொல்வது படைப்பாளியின் படைப்பு தன்மையை பாதிக்கும் என்ற கருத்தின் மேல் எப்போதும் சந்தேகம் கொண்டிருக்கிறேன்.

அதை வலுப்படுத்தும் விதமாகவே தாமஸ் மன்னின் எழுத்துலகமும், நாஜிக்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த எதிர்ப்பும் அமைந்துள்ளது.

தாமஸ் மன் (Thomas Mann) நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர்.Budden Brooks,The Magic Mountain, Death in Venice’ ஆகியன இவருடைய முக்கியமான படைப்புகள்.நோய் குறித்து எழுதப்பட்ட உலக இலக்கியங்களில் (The Plague,Cancer Ward,The Bell Jar,ஆரோக்கியநிகேதனம்) இவரது The Magic Mountain முக்கியமான இடத்தை வகுக்கிறது.

இவருடைய படைப்புகளில் நீட்ஷே,ஷோஃபனரருடைய தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இவருடைய டைரி குறிப்பு, Death In Venice’ ன் காதாப்பாத்திரத்தின் இயல்பு கொண்டு இவர் ஓர் ஓரிணைசேர்க்கையாளராக கருதப்படுகிறார்.

Listen German! என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாஜிக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை பேசி வந்திருக்கிறார்.

ஹெர்மன் ஹெஸ்ஸேவும் ,இவரும் தொடர்ந்து கடித தொடர்பில் இருந்துள்ளனர். இருவருமே இந்திய மரபை வைத்து ஒரு கதை எழுதுயிருப்பது சுவாரஸ்யமான விசயம்.(இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள்).

மாறிய தலைகள் (Transposed Head) மனிதனின் இருப்பு (Being) பற்றியும் அவனது ஆசைகள் (Desire) பற்றியும் அது எவ்வாறு மதம், திருமணம் போன்ற அமைப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது போன்ற எக்காலத்திற்குமான சிக்கலை விசாரணை செய்யும் கதையாகும்.

இந்த கதையை சாமதேவ என்பவர் எழுதிய Katha Sarita Sagara லிருந்து தழுவி தாமஸ் மன் எழுதியுள்ளார். தாமஸ் மன்னிலிருந்து கிரிஷ் கர்னாட் ஹாயவதனா (Hayavadana) என்ற பெயரில் நாடகமாக தழுவி இயற்றியுள்ளார். மூன்று கதைகளுமே ஒரே கருவை வைத்து வெவ்வேறு முடிவுகளை சென்று சேர்கின்றன.

சாமதேவ எழுதிய கதையில் விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதையை சொல்லி கேள்வி கேட்கும்.
அந்த கதையில்,
கனவன், மனைவி, மனைவியின் தம்பியும் பயணம் செய்வார்கள்.அப்போது வழியில் காளி கோயிலுக்கு வணங்க செல்லும் கனவன் காளியின் கோர ரூபம் கண்டு தலையை துண்டுத்துக் கொள்கின்றான்.பின்னால் வந்த தம்பியும் பிணத்தை கண்ட அதிர்ச்சியில் தானும் தலையை கொய்து கொள்கிறான்.கடைசியாக இரு பிணங்களை பார்த்த மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு எத்தனிக்கும் போது காளி தோன்றி தலையை ஒட்டிக் கொண்டு உயிர்ப்பிக்க அருள் புரிகிறாள்.அவசரத்தில் தலையை மாற்றி வைத்து விடுகிறாள் மனைவி.

கதையை நிறுத்தி ,இப்போது யார் அவளுடைய கனவன் என்ற கேள்வியை கேட்கிறது வேதாளம்.
எந்த பிரச்சினையும் இல்லாமல் விக்ரமாதித்தன், கனவன் தலையை உடையவன் தான் கணவன் என்று கூறி கதை முடிகிறது.

இந்த அடையாளம் சார்ந்த தத்துவ பிரச்சினையை எடுத்து கொண்டுதான் தாமஸ் மன் நவீன கதையாக எதார்த்த மனிதர்களை வைத்து எழுதிப் பார்க்கிறார்.

சாமதேவருடைய கதை ஒரு நீதி கதை என்பதாலும் அது ஏற்கனவே உள்ள மதம் சார்ந்த கருத்துகளை கொண்டுதான் கதை முடிகிறது என்பதாலும் அங்கே தனிமனித உள்ளுணர்வில் தோன்றும் கேள்விக்கு இடமில்லை. அதனால் பிராமணியம் சார்ந்து தலைதான் (Superiority – Bron in bramma head) உயர்ந்தது என்ற கருத்தின் மேல் நாம் விமர்சனம் வைக்க இடம் உள்ளது.

தாமஸ் மன்னின் கதையில் அடையாளம் (Identity) சார்ந்து பிரச்சினையை எழுப்புவதால் Martin Hidegger – ன் ‌Being (“Dasein”) பற்றிய தத்துவம் கொண்டு ஆராயலாம்.

நான் (Being) என்பதை எனது உடல், நான் இங்கே இருக்கிறேன் என்ற உணர்வு ஆகிய அடிப்படையில் Saptial and Temporal ஆக வரையறுக்கலாம்.

சீதைக்கு ஸ்ரீதாமன் மீது ஆசை குறைந்து நந்தன் உடல் மேல் வேட்கை அடைகிறாள். பிறகு புதிய உருவம் பெற்ற கனவுடன் வாழும் வாழ்க்கையிலும் இறுதியில் சலுப்பே அடைகிறாள்.

இங்குதான் Hidegger ன் Being-in-Time பற்றிய கருத்து கொண்டு விவாதிக்கலாம்.

சில கலைச்சொற்களின் பொருள்:

Authenticity – (Set of rules) ஒருவருடைய பழக்க வழக்கம் (ஸ்ரீ தாமன் பிராமண ஆச்சார முறைகளை பின்பற்றி வாழ்பவன், அதுதான் அவனுடைய Authenticity)

PostRefflect- நிகழ்வு நடந்து முடிந்த பிறகு.

ஸ்ரீ தாமன் Authenticity படி அவன் sexual interest ஐ விருமபாதவன்.அதனால்‌ முதலில் சீதையை நிர்வாணமாக பார்த்த போது அதில் தெய்விக தன்மையை பற்றி பேசிகிறான். பிறகு அந்த உடல் குறித்து வேட்கை கொள்கிறான்.

ஒரு நிகழ்விற்கு பிறகு (PostRefflective Period) Being ன் Authenticity மாறும் என்றால் மாறிய ‌தன்மைதான் அதன் Authenticity ஆகும். அப்படி பார்க்கும் போது Being in Time என்பது தொடர்ந்து Past-Present-Future ல் , ஒவ்வொரு புதிய ‘now’ ஐ சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

Lack (குறை) முதலில் தெரிகிறது, அதிலிருந்து Desire உருவாகிறது, Desire ஒரு Completeness நோக்கி நகர்கிறது. Comleteness என்பது நிரந்தரம் இல்லை என்பதால் இதற்கு தீர்வாக Destruction ல் கதை முடிகிறது.

தாமஸ் மன் ‘Nature of Being’ பற்றி பேசிகிறார்.இதே theme ஐ வைத்தே கிரிஷ் கர்னாட் ‘Compeletenss of Being’ பற்றி எழுதி பார்க்கிறார்.

ஒரு வகையில் இந்திய மண்ணிலிருந்து எடுத்த கல்லைக் கொண்டே இங்குள்ள மாபெரும் புனிதமான மலைத்தேன்(சீதை) மேல் எரிந்துள்ளார் தாமஸ் மன்.

Hayavadana (குதிரை தலையை உடையவன்) என்ற நாடகத்தில்,இதே போல் குதிரை தலையை உடையவன் காளி கோவிலில் தலையை துண்டிக்க எத்தனிக்கும் போது காளி தோன்றுகிறாள்.அப்போது அவன் தன்னை முழுமையாக மாற்றும் படி கெஞ்சுகிறான். காளி அவனை முழு குதிரையாக மாற்றுகிறாள்.

கிரிஷ் கர்னாடின் முடிவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு கதை ஒரு முழுமையை‌த் தருகிறது(End With Completeness).மறுப்பவர்களுக்கு கதை முழுமையற்றதாக (End with Lack) இருக்கிறது. அதை தொடர்வது வாசகர்களின் desire.

வேதாளக் கதை being-ன் குறையைப் பற்றி பேசாமல் முடிகிறது.
தாமஸ் மன் கதையில் being முழுமையடையாமல் (Incompleteness) குறையுடனும் (Lack), ஆசையுடனும்(Desire) மரணத்தில் முடிகிறது.
கிரிஷ் கர்னாடின் கதையில் Hayavadana வை குதிரையாக மாற்றி உயிர் வாழ விடுகிறார். Hayavadanaன் மனநிலையை வாசகர்களின் முடுவுக்கே விட்டுவிடுகிறார்.

இறுதியாக மனிதன் (Being) பிறப்பிலிருந்து மரணம் தொடர்ந்து பல ‘now’ களை சந்தித்துக் கொண்டு மாறிக் கொண்டே இருக்கிறான் மரணிக்கிறான். ஆனால் இந்த பிரதிகளுக்கு நேரத்தால் எந்த தொடர்பும் இல்லை.அதனால் பிரதிகளுக்கு மரணம் என்பது கிடையாது.

இந்த கதைகள் ஒவ்வொரு முறை வாசிக்க படும்போதும், நினைவு கூறப்படும் போதும் மனிதனில் புதிய விளைவை உண்டு பண்ணுகிறது.புதிய கதைகளை உருவாக்குகிறது. இந்த பிரதிக்கு முடிவு என்ற ஒன்று கிடையாது, அதனால் முழுமையும் கிடையாது. அதனடிப்படையில் ஒரு பிரதியை ஒரு ஒட்டு மொத்த now களின் விளைவாக Consolidate ஆக பார்க்கலாம்.

இந்த மூன்று கதைகளையும் தனி தனி பிரதியாக காணாமல், மூன்றுமே ஒரே காலநதியின் வெவ்வேறு படித்துறைகள் எனலாம்.

காலநதிக்கு முடிவில்லை!

கோப்பெருஞ்சோழனின் நடுகல் – ராகவேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 4

கோப்பெருஞ்சோழனின்நடுகல்



கேட்டல்மாத்திரைஅல்லது, யாவதும்காண்டல்இல்லாதுயாண்டுபலகழிய,
வழுவின்றுபழகியகிழமையர்ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்படஒழுகல்என்றுஐயம்கொள்ளன்மின், ஆரறிவாளிர்!
5
இகழ்விலன்; இனியன்; யாத்தநண்பினன்;
புகழ்கெடவரூஉம்பொய்வேண்டலனே;
புன்பெயர்கிளக்கும்காலை, என்பெயர்பேதைச்சோழன்என்னும், சிறந்தகாதற்கிழமையும்உடையவன்; அதன்தலை,
10
இன்னதோர்காலைநில்லலன்;
இன்னேவருகுவன்; ஒழிக்க, அவற்குஇடமே!
 

புறநானூறு 216

“ நீங்கள் கேள்வி மூலம்தான் பழகி உள்ளீர்கள்; பார்த்துக் கொண்டதே இல்லை. பல ஆண்டுகளாக உரிமையுடன் பிழையின்றிப் பழகியவர்கள் தான். ஆனாலும், அரசே! அவர் வருவது கடினம் தான். உங்கள் முடிவை செயல் படுத்துங்கள்.  “ என்று  அறிவாளிகளே, நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். 

அவன் இகழ்ச்சி அற்றவன்; இனிய நண்பன். எங்கள் நட்பின் பெருமையை தாழ்த்தி விட மாட்டான். அவன் பெயரைச் சொல்லும்போது கூட பேதைச் சோழன் என்று உரைப்பான். அன்புள்ள உரிமை கொண்டவன். அதனால் இனியும் தாமதிக்க மாட்டான். இப்போதே வந்து விடுவான். அவனது இடத்தையும் தயார் செய்யுங்கள்.

***

ஒவ்வொரு காலகட்ட சமூகமும் நெடுங்காலம் கழித்து வரும் சமூகத்திற்குச் சொல்வதற்காகச் சில செய்திகளையும் சின்னங்களை விட்டுச் செல்ல விரும்புகிறது. இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், சாலைகளில் இப்போது பதித்து வைத்திருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அடையாளக் கற்களைப் பார்க்கும் வாரிசுகள் அவற்றை வீர்ர் வழிபாட்டு நடுகற்கள் என்று நினைக்கக் கூடும். அகழ்வாய்வில் ஒருவேளை கண்ணாடி இழை வடங்களைக் கண்டறிந்தால், மின்சக்தி உயிரோட்டமாகச் சென்று கொண்டிருந்ததன் சின்னம் அந்தக் கற்கள் என்று உணரக்கூடும்.  நாம் இன்று காணும் நடுகற்களும் உயிருள்ள வரலாற்றின் மிச்சம் தான். 

திருச்சிக்கு அருகிலிருக்கும் உறையூர் சென்றால், ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும். ஏதோ ஒரு மணற்பரப்பின் கீழ் கோப்பெருஞ்சோழன், அவனது நடுகல், அவனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் கிடக்கலாம்.

கோப்பெருஞ்சோழனுக்கு உறையூரில் நடுகல் அமைக்கப் பட்டதாகப் புறநானூறு கூறுகிறது. ஆனால் இன்று அது இருந்த இடம் அறியக்கூடவில்லை.  காலத்தின் சீற்றத்தாலோ காவிரியின் ஊற்றத்தாலோ கலைந்து போயிருக்கலாம். ஆனால் கல்லை விட நிலைத்த பதிவு சொல். நற்பேறாக கோப்பெருஞ்சோழன் தொடர்புடைய பல பாடல்கள் கிடைத்துள்ளன.

தனது மகன்கள் ஆட்சி கேட்டு போருக்கு அழைக்கிறார்கள். மன்னனும் அரசதர்மத்தின் படி எதிர் கொள்ளத் தயாராகி விடுகிறான். புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவுரை கூறுகிறார்.  ‘நீ வென்றால், வாரிசு இல்லாமல் நாடு அழியும். தோற்றால் நீ இழுக்கு அடைவாய். எனவே, விட்டு விடுதலையாகி நிற்பாய்’.

மன்னன் ஆட்சியை மகன்கள் வசம் அளித்து விடுகிறான். மேலும் சமணர்கள் சிறிது சிறிதாக உயிர் துறக்கும் பெரும் விரதமாகிய வடக்கிருத்தலை மேற்கொள்கிறான்.: புலவர் வடக்கிருக்கச் சொன்னாரா என்ன? வானோர் விரும்பும் நற்செயல் செய்யவும் துன்புற்றோர்க்கு அருள் சுரக்கவும் தான் சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மன்னன் முடியுடன் உடலும் துறக்கிறான். ஏன் அந்த முடிவை எடுத்தான்? வாழ்வின் சில தருணங்கள் அடிப்படைக் கேள்விகளை எழுப்பி எல்லையை நோக்கித் தள்ளி விடுகின்றனவா? சமணர்கள் நூலாகிய அருங்கலச் செப்பு கூறுகிறது

 “இடையூறு, ஒழிவில் நோய் , மூப்பு    இவை வந்தால்

  கடை துறத்தல் சல்லே கனை”.

கோப்பெருஞ்சோழனின் அருமை நண்பர் பாண்டிய நாட்டில் வாழும் பிசிராந்தையார். அவர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே அன்பு செலுத்திவருகிறார்கள் என்பது நட்புக்கு மேலும் ஒளியூட்டுகிறது.  ஒரு வேளை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல் – உளவு சிக்கல்கள் வரும் என நினைத்திருக்கலாம்.

வடக்கிருத்தல் களத்தில் சோழன் சொல்கிறான் – பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்குங்கள். – ‘ஒழிக்க அவற்கு இடமே’. மன்னனுடன் வடக்கிருத்தலுக்கு பலர் முன் வருகின்றனர். ஆனால் பிசிர் என்னும் ஊரைச்சேர்ந்த ஆந்தையாருக்கு சிறப்பான இருக்கை அளிக்குமாறு சொல்கிறான் சோழன். தனது முடிவை கண்டிப்பாக தூதன் மூலம் நண்பருக்கு அனுப்பியிருப்பான்.

புறம் 214ஆம் பாடலில்  கோப்பெருஞ்சோழன் உலகிற்கு பொதுவான அறிவுரை கூறுகிறான் – “உயர்ந்த செயலுக்கு ஊக்கம் கொள்ளவேண்டும்” – ஒரு இறுதிச் செய்தி போல.  பாடல் 215 சோழன் “அவர் வந்து விடுவார் “ என்று கூறுவது தான்.  213 ஆம் பாடல் தான் புல்லாற்றூர் எயிற்றியனாரின் அறிவுரை. 

212 ஆம் பாடல் பிசிறாந்தையார்  கோப்பெருஞ்சோழன் மீது அன்புடன் பாடியது. இதில் கோழியூர் (உறையூர்)  பற்றிய குறிப்பு வருகிறது. 217 ஆம் பாடல் பொத்தியார் என்னும் புலவர், பிசிராந்தையார் வடக்கிருக்க வந்து விட்ட்தை பரவசத்துடன் பாடியது. ஆனால் நண்பர் வரும்வரை கோப்பெருஞ்சோழன் உயிர் வைத்திருந்தானா என்பது அறியக் கூடவில்லை.

புறம் 218 பிசிராந்தையார் வடக்கிருந்தபின் கண்ணாகனார் அவரைப் புகழ்ந்து பாடியது. (சான்றோர் சான்றோர் பாலர் ஆப). 219 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாகனார் கோப்பெருஞ்சோழனைப் பாடியது. 

பொத்தியாரின் வாழ்வு இனியது. அவரும் வடக்கிருக்க விரும்பியபோது, சோழன் சொல்கிறான் – உமக்கு மகன் பிறந்தபின் வருக – என்று.அவர் சோழனின் நடுகல் கண்டு பாடியது 221 (நடுகல் ஆயினன் புரவலன்). அவருக்கு மகன் பிறந்தபின் சோழனின் நடுகல்லிடம் சென்று ‘ என் இடம் யாது?’ என்று கேட்டு வடக்கிருக்க முனைவதை 222 ஆம் பாடல் காட்டுகிறது. 223 பொத்தியார் சோழனை இடம்  கொடுத்த்தற்காகப் புகழ்வது.

தற்காலத்திலும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 240 சமணர்கள் சல்லேகனை (வடக்கிருத்தல் ) செய்கிறார்கள் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இது தற்கொலை செய்யும் குற்றமாகும் என்று எழுதிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் 2015 இல் தடை விதித்துள்ளது. 

இந்தியப் பெருநிலத்தில் மானுடன் மரணத்துடன் உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறான். அதைப் புரிந்துகொள்ள – அடக்கியாள – வென்று கடந்து செல்ல முயன்று கொண்டிருக்கிறான். நாட்டிற்காக போரில்   உயிர்நீத்த வீர்ர்களுக்கும் தன் புலன்களையும் மனதையும் வெல்ல உயிர்நீத்த மகா வீரர்களுக்கும் நடுகல் வைத்துக் கொண்டிருக்கிறது மானுடம். இந்தக் கற்கள் ஆகாயத்திடம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றன – ‘அங்கும் எனக்கு இடம் உண்டு’

நமக்கு கோப்பெருஞ்சோழனின் மகன்கள் யார் என்று தெரியாது. பிசிராந்தையாரின் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் பற்றியும் தெரியாது. ஆனால் சோழனையும் அவனைப் பாடிய புலவர்களையும் தமிழ் உள்ளவரை கொண்டாடுவோம். சொல்லை விடச் சிறந்த நடுகல் இல்லை.

கொரானா கால சந்திப்புகள் – 4

மே 24 அன்று எங்களின் நான்காவது ஸ்கைப் சந்திப்பு நிகழ்ந்தது. ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டமையால் நண்பர்கள் வெளி வேலைகளையும் கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிகழ்வில் பங்கேற்பு முந்தைய சந்திப்புகளை விட குறைவாகவே இருந்தது. ஆனால் ஸ்கைப் சந்திப்புகளில் மிக அணுக்கமானதாகவும் இதுவே இருந்தது.

நண்பர் நவீன் சங்கு தாமஸ் மண் எழுதிய “மாறிய தலைகள்” குறுநாவலை தேர்ந்தெடுத்திருந்தார். சற்று பெரிய குறுநாவல் என்றாலும் புராணத் தளத்தில் நடைபெறும் கதை என்பதால் விரைவிலேயே வாசிக்க முடிந்தது. மேலும் தாமஸ் மண் எழுதிய நாவல்களில் தமிழில் தற்போது கிடைப்பது இது ஒன்றுதான் என்றும் தெரிகிறது. தமிழில் மட்டும் வாசிக்கும் நண்பர்கள் தவறவிடாமல் வாசிக்க வேண்டியது இந்த குறுநாவல். தமிழாக்கம் செய்யப்படாததாலேயே “தாமஸ் மன்”னை தமிழ் வாசகர்கள் தவற விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

மாறிய தலைகள் ஒரு வகையில் புராண அங்கத ஆக்கம் என்று சொல்லலாம். இந்திய தத்துவங்களின் மேல் பெரும் ஆர்வம் கொண்ட ஷோபன்ஹெயரின் பற்றாளரான தாமஸ் மன் இந்திய தத்துவியலை தீரமாக ஆராய்ந்திருக்கிறார். அவரின் அப்புரிதல்களின் மீது நின்று கொண்டு ‘நிறுவனமாக்கப்பட்ட’ அத்தனையையும் மெல்லிய அங்கதத்துடன் கேள்விக்குள்ளாக்குகிறார். தீவிர அரசியலில் ஈடுபாடு கொண்ட அவரின் பின்புலத்தை அறிந்துக் கொள்ளும்போது அவரின் இக்கேள்விகள் அர்த்தம் பொருள்படுகிறது. நாஜிக்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி அதனால் நாடுகள் தாண்டிச் சென்று தலைமறைவாக வாழ்ந்தவர் அவர். நிறுவனங்களாக ஆக்கப்படும் கலாச்சாரத்தின் விளைவுகளை தகிக்கும் நிலத்தில் நின்று புரிந்துக் கொண்டவர். ஆனால் இக்குறுநாவலில் பெரும்பாலும் தனிமனித விழுமியங்களையும், அவர்களை பிரிக்கும் சமூக தளங்களின் முரணையும், திருமணம் மற்றும் அது பறிக்கும் உடல் மீதான உரிமைகளையும் விவாதங்களுக்குட்படுத்துகிறார். துறவு வாழ்வையும் அவர் விட்டுவைக்கவில்லை. எதை எப்படி மாற்றி குழப்பினாலும் இயற்கை தன்னை மீட்டுக் கொள்ளும். தலைகள் மாறினாலும் தனக்கேற்ற உடலைத் தலை மாற்றிக் கொள்ளும். ஶ்ரீதமன், நந்தன், சீதா மூவரும் மூவராலும் தலையும் உடலுமாய் தனித்தனியாய் பார்க்கப்படுகின்றனர். அவ்வொவ்வொரு கணத்திலும் அவர்களின் மன எண்ணங்கள் இங்கே முக்கியமாக விவரிக்கப்படுகிறது. தலைகளும் உடல்களும் விழைவுகளுக்கு மாற்றான தத்துவங்களின் குறீயிடாக மாறி அமைகிறது. இக்கதைச் சொல்லியின் மாறுபடும் தொனி அலாதியானது. காளி இறங்கி பேசும் இடம், மொழி புராணத் தன்மையிலிருந்து உலகியல் தன்மைக்கு மாறுவது அங்கதத்தின் உச்சம். மனிதர்களெல்லாம் புனிதர்களைப் போல அறங்களையும் தத்துவங்களையும் பேசிக் கொண்டிருக்கும்போது காளி எனக்கான மரத்தில் தூகிட்டு தொங்கி அதன் புனிதத்தை கெடுத்துவிடாதே என்று அலுத்துக் கொள்கிறாள். இக்கதையை இந்திய தத்துவியலுக்கு எதிரானது என்றோ அல்ல இந்திய மரபை தெரியாமல் மேற்கத்தியவர் எழுதியது என்றோ தவறாக புரிந்துக் கொள்ளாவிட்டால் மனித விழுமியங்களையும் விழைவுகளையும் அங்கதச் சூட்டில் வாட்டி தாமஸ் மன் பரிமாறுவதை அலாதியாக அனுபவிக்கலாம்.

பாலாஜி, சுகுமாரனின் இரு கவிதைகளை தேர்ந்தெடுத்திருந்தார். இக்கவிதைகள் எந்த வரிசையில் வைத்து வாசிக்கப்பட வேண்டுமென்றும் உணர்வுநிலைகளை மிகக் கூரான சொற்களால் அது விவரிக்கும் தன்மையினை முன்வைத்தார். இக்கவிதைகளிலும் காளி வந்திருந்தாள்.

ராகவேந்திரன், கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் புறநானூற்றுப் பாடல் – 216 தேர்ந்திருந்தார். நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இப்பாடலில் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ‘ஒழிக்கும்படி’ கேட்கப்படுகிறது. ஒருமுறை கூட சந்திராத நண்பன் எனக்காக வந்து என்னுடன் வடக்கிருப்பான் என்னும் சோழனின் நம்பிக்கை மிதமிஞ்சி நட்பின் பெருமையை உரக்கக் கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வந்தார் என்றும் அவரும் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்றும் பின் வரும் புறாநானூற்றுப் பாடல்கள் சாட்சி சொல்கிறது. ஶ்ரீதமனும் நந்தனும் போலவே நட்புக்காக உயிர் துறக்கும் இன்னொரு நட்புக் கதை விவாதிக்கப்பட்டது.

மூன்று தேர்வுகளுக்கும் இருந்த ஒற்றுமை வியப்பளித்தது. ஏதேச்சையான நிகழ்வுகளின் ஒற்றுமைகளில் வியப்பு ஒரு சொட்டு விழுவதால் மகிழ்வு சற்று தூக்கலாகுகிறது. இருண்மையான இந்நாட்களில் எதுவும் கொஞ்சம் அதிகாமாகத்தான் தேவையாயிருக்கிறது.

நரேன்